|| ஸ்ரீ குருப்யோ நம: ||
விதிதாகம தத்வ விபுத்தமதே
ரசிதாகிலகர்ம விகதத்தகதே |
ஸததாபஜிதாகில தேவததே
பவ சந்திர சேகர மே சரணம் ||
நான்கு வேதங்கள் ஆறு வேதாந்தங்கள் அறுபத்து நான்கு கலைகள் போன்ற யாவற்றினும் உட்கருத்தை உன்னிப்பாக அறிந்திருப்பவரும், வேத விதியை அனுஸரித்துத் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும் செய்து தெளிந்த நுண்ணறிவைப் பெற்றிருப்பவரும், பாகுபாடு அற்ற நிலையில் ஸகல தேவதா ஸ்வரூபங்களையும் ஒன்றாகவே மதித்து எப்பொழுதும் ஸேவித்து வருபவருமான சந்த்ரசேகர ஸத்குருவே தாங்கள் தான் எனக்கு அடைக்கலம்.
த்ருடிதாகில தோஷ குணாகரதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சந்திர சேகர மே சரணம் ||
கால் நடையாகவே புண்ய பூமியான பாரதம் முழுமையும் சுற்றி வருபவரும் ஜதக் குருவாயுள்ளவரும் காமம் க்ரோதம் என்பது போன்ற எல்லா தோஷங்களையும் அறவே ஒழித்திருப்பவரும் அமானித்வம் அதமபித்வம் என்பது போன்ற எல்லா நற்குணங்களையும் பூரணமாகப் பெற்றிருப்பவரும் ஆன தங்களுடைய புனிதமான சரணங்களை என் மனதில் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் தான் எனக்கு அடைக்கலம்.
பவரோக விதூநஜ நாவநபோ
பவபூஜன பாவன மானஸ தே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவபூஜன பாவன மானஸ தே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சந்திர சேகர மே சரணம் ||
ஸம்ஸாரமெனப்படும் பெரிய வியாதியால் மிகவும் வாட்டமுற்றிருக்கும் ஜனங்களை நல்லுறையென்ற மருந்தைக் கொடுத்து காப்பாற்றி வருபவரும், பரமேஸ்வரனின் மூர்த்தி பேதமான சந்திர மௌளீஸ்வரரை இடையறாது பூஜிப்பதால் பிறரையும் பரிசுத்தம் ஆக்கவல்ல மனதைப் பெற்றிருப்பவருமான தங்களுடைய புனிதமான சரணங்களை என் மனதில் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் தான் எனக்கு அடைக்கலம்.
கலிதோஷ நிராகரணார்ஹமதே
கருணாவித ஸஜ்ஜன லோகததே |
ஸம்ஸாரமெனப்படும் பெரிய வியாதியால் மிகவும் வாட்டமுற்றிருக்கும் ஜனங்களை நல்லுறையென்ற மருந்தைக் கொடுத்து காப்பாற்றி வருபவரும், பரமேஸ்வரனின் மூர்த்தி பேதமான சந்திர மௌளீஸ்வரரை இடையறாது பூஜிப்பதால் பிறரையும் பரிசுத்தம் ஆக்கவல்ல மனதைப் பெற்றிருப்பவருமான தங்களுடைய புனிதமான சரணங்களை என் மனதில் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் தான் எனக்கு அடைக்கலம்.
கருணாவித ஸஜ்ஜன லோகததே |
குருமாம் பவதுக்க விஹீத ஹ்ருதம்
பவ சந்திர சேகர மே சரணம் ||
கலியினால் ஏற்படும் ஸகல விதமான தோஷங்களையும் விலக்கவல்ல கூர்மையான புத்தியையுடையவரும், ஸாது ஜனங்களுக்கு ஏற்படும் துன்பங்களை விலக்கி அவர்களை கருணையினாலேயே காப்பாற்றி வருபவருமான தங்கள் ஸம்ஸாரிகமான துக்கங்கள் என்னை தாக்காதபடி கருணை செய்ய வேண்டும். தாங்கள் தான் எனக்கு அடைக்கலம்.
பவதா ஜனதா ஸுகிதா பவிதா
சரணாகத ரக்ஷண தக்ஷகுரோ
பவ சந்திர சேகர மே சரணம் ||
ஸம்ஸாரத்தில் செய்யப்படும் கொடிய பாபமாகிய காட்டுத்தீயினால் மிகவும் தாபத்தையடைந்துள்ள ஜீவராசிகள் தங்களுடைய கருணை வெள்ளத்தினால் சாந்தியையடைய வேண்டும். அடைக்கலம் என்று தங்களை வந்தடைந்தவர்களை ரக்ஷிப்பதில் தாங்கள் கையாளும் முறையே மிகவும் ஆச்சரியமானது. ஸத்குருவான தாங்களே எனக்கு அடைக்கலம்.
துலநாமய தாமிஹ கோநுஸுதீ |
சரணாகத வத்ஸல தத்வ நிதே
பவ சந்திர சேகர மே சரணம் ||
வ்ருஷபத்தைக் கொடியிற் கொண்ட பரமேஸ்வரருடைய புண்ய நாமங்களுள் ஒன்றான சந்த்ரசேகரர் என்ற பெயரையே கொண்டு விளங்கி வரும் தங்களுக்கு ஈடாக இப்பொழுது யாருமில்லை. இனியும் இருக்கக் கூடுமோ என்ற ஐயமே எனக்கு ஏற்படுகிறது. அடைக்கலம் என்று அடைந்தவர்களை அன்போடு நோக்கும் தத்வ ஞானியான தாங்களே எனக்கு அடைக்கலம்.
கதிதோ வெசரத்தி மஹாமஹஸ: |
அஹிமாப் கரிவாத்ர பவாநிதமே
பவ சந்திர சேகர மே சரணம் ||
க்ஷீணமடைந்து வரும் உலகத்தைக் காத்தருளும் நோக்கத்தில் தோன்றியவரும் பெரியோர்கள் பலர் அவர்களுள் கதிரோன் போன்று சிறப்புற்று விளங்குபவர் தாங்கள் தான் என்ற முடிவு எனக்கு ஏற்பட்டுவிட்டது. அடைக்கலம் என்று அடைந்தவர்களை அன்போடு நோக்கும் தத்வ ஞானியான தாங்களே எனக்கு அடைக்கலம்.
ஓம் காஞ்சி வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி |
தன்னோ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||
பெரியவா சரணம்!

No comments:
Post a Comment