Friday, March 14, 2014

குருப்புகழ்

|| ஸ்ரீ குருப்யோ நம: ||



வேத மறைகளு ஞான வொளியுடை
போத னெனவொரு குருநாதா !
வேத விதிதனை போற்று நடையுறு
நாத னடிதொழு பெருமானே !

ஞால மடிதொழு வேத முறைதிரு
கோல மகளுரு குருநாதா !
நாளு வருமிருள் போக்கி நலந்தரு
ஞான வடிவுடை பெருமானே !

நேய மருட்திரு பாதம் பணிபவர்
வேண்டு மருள்தரு குருநாதா !
ஆழி பொழுதுடை சோக துயர்தனை
நீக்கி யருள்தரு பெருமானே !

சூது நிறையொரு கால மிதிலுடை
சாது மனமுறை குருநாதா !
போது நிலைதனில் ஞான மருட்திரு
நாத னெனவரும் பெருமானே !

ஆதி யிறைவனு மாகிபுவியுறை
நாதி யெனவரு குருநாதா !
சோதி பொருளுரை நாளு மருளிய
ஆதி தலமுடை பெருமானே!

நந்திக் கொடியொடு மாதி யிறையருட்
சோதி வடிவுடை குருநாதா !
பாப வினைகளும் போக்கி நலமருள்
காஞ்சி தலமுறை பெருமானே !


பெரியவா சரணம்!

- சாணு புத்திரன்.

No comments:

Post a Comment